செய்திகள்
கொரோனா வைரஸ்

துணை மேலாளருக்கு கொரோனா- ஆண்டிப்பட்டியில் வங்கி கிளை மூடல்

Published On 2020-07-15 09:09 GMT   |   Update On 2020-07-15 09:09 GMT
ஆண்டிப்பட்டி நகரில் செயல்படும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளையில் பணிபுரிந்த துணை மேலாளருக்கு கொரோனா உறுதியானதையடுத்து வங்கி கிளை மூடப்பட்டது.
ஆண்டிப்பட்டி:

தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஆண்டிப்பட்டி நகரில் செயல்படும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளையில் பணிபுரிந்த, மதுரை மாவட்டம் பேரையூர் பகுதியை சேர்ந்த 28 வயது பெண் துணை மேலாளர் ஒருவருக்கு பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து வங்கி கிளையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. நேற்று அந்த வங்கி கிளை மூடப்பட்டது.

வங்கியில் பணிபுரியும் 10 ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வங்கிக்கு சென்று வந்த வாடிக்கையாளர்கள் தாங்களே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்றும், உடல்நலக்குறைவு ஏற்பட்டால் உடனே அரசு மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்து கொள்ளும்படி சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். 
Tags:    

Similar News