செய்திகள்
கடையில் பொருட்கள் திருட்டு

நல்லம்பள்ளி அருகே மளிகை கடையில் பொருட்கள் திருட்டு

Published On 2020-07-11 07:14 GMT   |   Update On 2020-07-11 07:14 GMT
நல்லம்பள்ளி அருகே மளிகை கடையில் பொருட்கள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி அருகே தடங்கம் கிராமத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை அருகே மளிகை கடை நடத்தி வருபவர் மூர்த்தி (வயது 45). இவர் நேற்று முன்தினம் வியாபாரத்தை முடித்து விட்டு கடையை பூட்டிவிட்டு சென்றார். நேற்று காலை அவர் வழக்கம் போல் கடைக்கு சென்றபோது மேற்கூரைஅகற்றப்பட்டு இருந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கடைக்குள் சென்று பார்த்தார். அப்போது சுமார் 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மளிகை பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது. இதுதொடர்பாக மூர்த்தி கொடுத்த புகாரின்பேரில் அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News