செய்திகள்
மின்சாரம் தாக்கி பலி

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

Published On 2020-07-08 11:39 GMT   |   Update On 2020-07-08 11:39 GMT
சேலம் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




சேலம்:

சேலம் அழகாபுரம் பகுதியை சேர்ந்தவர் நிரஞ்சன் குமார் (வயது 30). இவர் கட்டிடங்களுக்கு டைல்ஸ் ஒட்டும் தொழில் செய்து வந்தார். நேற்று முன்தினம் அவர் செவ்வாய்பேட்டை பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஒரு வீட்டில் டைல்ஸ்க்கு பாலிஷ் செய்யும் பணியில் எந்திரம் மூலம் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே நிரஞ்சன்குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து செவ்வாய்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News