செய்திகள்
கொரோனா வைரஸ்

தர்மபுரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு

Published On 2020-07-06 12:22 GMT   |   Update On 2020-07-06 12:22 GMT
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது-

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து 100-ஐ தாண்டி உள்ளது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் தர்மபுரி மாவட்டத்தில் 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 52 வயது ஆண் ஒருவர் சிகிச்சை பலனின்றி பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  
Tags:    

Similar News