செய்திகள்
வாலிபர் தற்கொலை

தாராபுரத்தில் லாரி முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை- யார் அவர்? போலீஸ் விசாரணை

Published On 2020-06-28 14:13 GMT   |   Update On 2020-06-28 14:13 GMT
தாராபுரத்தில் லாரி முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாராபுரம்:

தாராபுரம் வழியாக செல்லும் பழனி-ஒட்டன்சத்திரம் புறவழிச்சாலையில் வாலிபர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். பின்னர் அவர் சாலையை கடப்பது போல் குறுக்காக சென்றார். அப்போது திடீரென்று அந்த வழியாக வந்த ஒரு லாரியின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அவர் யார்? எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்ற விவரம் தெரியவில்லை.

இந்த சம்பவம் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. இது குறித்து தாராபுரம் தெற்கு கிராம நிர்வாக அலுவலர் ஸ்ரீதர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விரைந்து வந்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். பலியானவரின் உடலை போலீசார் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News