செய்திகள்
விபத்து பலி

சரக்கு ஆட்டோ, மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதல்- வாலிபர் பலி

Published On 2020-06-28 07:49 GMT   |   Update On 2020-06-28 07:49 GMT
பெரம்பலூர் அருகே விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குன்னம்:

பெரம்பலூர் அருகே உள்ள புதுநலுவலூர் கிராமத்தை சேர்ந்த ராம்குமார் மகன் முத்துக்குமார்(வயது 22), வேலூரை சேர்ந்த செல்லமுத்து மகன் அஜித்குமார்(23). ஏசி மெக்கானிக்கான இருவரும் குன்னத்தில் இருந்து பெரம்பலூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

பெரம்பலூர்- அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் சித்தளி கிராமம் அருகே சென்றபோது, வேப்பூரில் இருந்து பெரம்பலூர் நோக்கி சென்ற சரக்கு ஆட்டோவும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் முத்துக்குமார், அஜித்குமார் மற்றும் ஆட்டோ டிரைவர் முருக்கன்குடியை சேர்ந்த மருதை மகன் சுரேஷ்குமார்(27) ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர். தகவலறிந்த மருவத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, காயமடைந்தவர்களை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அஜித்குமார் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News