செய்திகள்
வீரபாண்டி அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உப்புக்கோட்டை:
வீரபாண்டி அருகே உள்ள கோட்டூர் பஜனைமடம் தெருவை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 31). குடிப்பழக்கத்துக்கு அடிமையான இவருக்கு, அவரது தாயார் அறிவுரை கூறினார். இருப்பினும் அவர் குடிப்பழக்கத்தை நிறுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து அவரது தாயார், உத்தமபாளையத்தில் உள்ள தனது அக்காள் வீட்டுக்கு சென்று விட்டார்.
இதனால் மனம் உடைந்த அருண்குமார், வீட்டில் யாரும் இல்லாதபோது சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த வீரபாண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் அருண்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீரபாண்டி அருகே உள்ள கோட்டூர் பஜனைமடம் தெருவை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 31). குடிப்பழக்கத்துக்கு அடிமையான இவருக்கு, அவரது தாயார் அறிவுரை கூறினார். இருப்பினும் அவர் குடிப்பழக்கத்தை நிறுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து அவரது தாயார், உத்தமபாளையத்தில் உள்ள தனது அக்காள் வீட்டுக்கு சென்று விட்டார்.
இதனால் மனம் உடைந்த அருண்குமார், வீட்டில் யாரும் இல்லாதபோது சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த வீரபாண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் அருண்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.