செய்திகள்
விபத்து பலி

கடத்தூர் அருகே விபத்தில் தீயணைப்பு வீரர் பலி

Published On 2020-06-26 07:33 GMT   |   Update On 2020-06-26 07:33 GMT
கடத்தூர் அருகே விபத்தில் தீயணைப்பு வீரர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடத்தூர்:

சேலம் மாவட்டம் ராமமூர்த்தி நகரை சேர்ந்தவர் அருள்(வயது 27). தீயணைப்பு படை வீரரான இவர் தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் பணிபுரிந்து வந்தார்.


நேற்று முன்தினம் இரவு இவர் கடத்தூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு நாய் சாலையின் குறுக்கே ஓடியதாக கூறப்படுகிறது. இதனால் அருள் சென்ற மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையோரத்தில் இருந்த புளியமரத்தின் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சு மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்திருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News