செய்திகள்
கைது

பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்- தொழிலாளி கைது

Published On 2020-06-24 14:30 GMT   |   Update On 2020-06-24 14:30 GMT
திருமண ஆசை வார்த்தை கூறி பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில், போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தொழிலாளியை கைது செய்தனர்.
அரூர்:

பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவருடைய உறவினர் சவுந்தர் (வயது 26). தொழிலாளியான இவர் அந்த மாணவியை காதலிப்பதாக கூறி வந்துள்ளார். பின்னர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், பின்னர் அவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டதாகவும் தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி இதுபற்றி பெற்றோரிடம் தெரிவித்தார்.

இதையடுத்து மாணவியின் பெற்றோர் அரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், சவுந்தரை கைது செய்தனர். 
Tags:    

Similar News