செய்திகள்
தமிழ்நாடு மின்சார வாரியம்

மின்கட்டணம் செலுத்த கால நீட்டிப்பு வழங்க முடியாது- மின்சார வாரியம்

Published On 2020-06-23 10:45 GMT   |   Update On 2020-06-23 10:45 GMT
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் தவிர பிற மாவட்டங்களில் மின் கட்டணத்தை செலுத்த கால நீட்டிப்பு வழங்க முடியாது என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
சென்னை:

ஊரடங்கு காரணமாக மக்கள் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ளதால் மின் கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடுவை ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிக்க கோரி, வழக்கறிஞர் சி.ராஜசேகர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். 

இந்த வழக்கில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், கொரோனா பரவலை தடுக்க அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக, மின் கட்டணம் செலுத்துவதற்கான தேதி நீட்டிக்கப்பட்டு அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மின்சார வாரியம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் ஜூலை 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், பிற மாவட்டங்களில் ஜூன் 15ம் தேதிக்குள் மின் கட்டணத்தை செலுத்த வேண்டுமென்ற உத்தரவின்படி, 75 சதவீத நுகர்வோர்  மின் கட்டணம் செலுத்திவிட்டதால் கால நீட்டிப்பு வழங்க முடியாது என்றும் தெரிவித்தார்.  

இதையடுத்து, இரு தரப்பு வாதங்களுக்காக வழக்கு விசாரணையை ஜூன் 29 ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Tags:    

Similar News