செய்திகள்
சான்றிதழ்களை சரிபார்த்த அதிகாரிகள்

நாகர்கோவிலில் 108 ஆம்புலன்சில் பணிபுரிய 110 பேர் தேர்வு

Published On 2020-06-16 09:27 GMT   |   Update On 2020-06-16 09:27 GMT
நாகர்கோவிலில் 108 ஆம்புலன்சில் பணிபுரிய 110 பேர் தேர்வு செய்யப்பட்டனர். நாளை டிரைவர்கள் தேர்வு நடைபெற உள்ளது.
நாகர்கோவில்:

108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கான ஆட்கள் தேர்வு நேற்று நாகர்கோவில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரியில் நடந்தது. இதில் ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர்கள் மற்றும் கால்சென்டர் பணிகளுக்கு தனியார் நிறுவனம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதில் மருத்துவ உதவியாளர் பணிகளுக்கு 130 பேர் வந்திருந்தனர். அவர்களது சான்றுகள் சரிபார்ப்புக்குப்பின் 95 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதேபோல் கால்சென்டர் பணிக்கு 10 பேர் வந்திருந்தனர். அவர்களில் 5 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

108 ஆம்புலன்ஸ் டிரைவர் பணிக்கு நாளை (புதன்கிழமை) ஆட்கள் தேர்வு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனாலும் நேற்று 30 பேர் வந்திருந்தார்கள். அவர்களில் 10 பேர் தேர்வு செய்யப்பட்டனர். மொத்தத்தில் 110 பேர் தேர்வு செய்யப்பட்டனர். நாளை டிரைவர்கள் தேர்வு நடைபெற இருக்கிறது என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News