செய்திகள்
கழிவுநீர்

அகரம்பள்ளிப்பட்டில் தெருவின் நடுவே வழிந்து ஓடும் கழிவுநீர்

Published On 2020-06-15 12:32 GMT   |   Update On 2020-06-15 12:32 GMT
கழிவுநீர் சாலையில் வழிந்தோடுவதால் அவ்வழியாக இருசக்கர வாகனங்கள் மற்றும் வாகனங்கள் செல்ல முடியாமல் பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
வாணாபுரம்:

தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது அகரம்பள்ளிபட்டு. இங்குள்ள கிழக்கு வீதியில் தெருவின் நடுப்பகுதியில் கழிவுநீர் சாலையில் வழிந்தோடுவதால் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது. அதனால் தொற்றுநோய் ஏற்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் அவ்வழியாக இருசக்கர வாகனங்கள் மற்றும் வாகனங்கள் செல்ல முடியாமல் பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Tags:    

Similar News