செய்திகள்
ஆதிரா

அசாத்திய திறமையுடன் 1½ வயது குழந்தை

Published On 2020-06-15 07:12 GMT   |   Update On 2020-06-15 07:12 GMT
பரமக்குடியை சேர்ந்த 1½ வயது குழந்தை விலங்குகள், பறவைகள், தேசிய தலைவர்கள், விளையாட்டுகள், பொது அறிவு கேள்விகள் என 177 பொருட்களை அடையாளம் காண்பித்து பதில் கூறும் அசாத்திய திறமை பெற்றுள்ளார்.
பரமக்குடி:

பரமக்குடி எஸ்.பி.எம். காலனியை சேர்ந்தவர் அருண் சக்கரவர்த்தி. இவர் சென்னையில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி திவ்யா. இவர்களது 1½ வயது பெண் குழந்தை ஆதிரா. இந்த குழந்தை விலங்குகள், பறவைகள், தேசிய தலைவர்கள், உடல் உறுப்புகள், வாகனங்கள், விளையாட்டுகள், பொது அறிவு கேள்விகள் என 177 பொருட்களை அடையாளம் காண்பித்து பதில் கூறும் அசாத்திய திறமை பெற்றுள்ளார்.

சிறுமியின் இந்த அபார திறமையை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
Tags:    

Similar News