செய்திகள்
தனியார் ஆஸ்பத்திரிகளில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு
நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட தனியார் ஆஸ்பத்திரிகளில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் நகர்நல மையங்களின் டாக்டர்கள், நர்சுகள் ஆகியோர் ஆய்வு நடத்தினர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே மாவட்டம் முழுவதிலும் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட தனியார் ஆஸ்பத்திரிகளில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் நகர்நல மையங்களின் டாக்டர்கள், நர்சுகள் ஆகியோர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் நாகர்கோவில் கோட்டார் பகுதிக்கு உட்பட்ட தனியார் ஆஸ்பத்திரிகளில் நேற்று ஆய்வு செய்யப்பட்டது. வடிவீஸ்வரம் நகர்நல மைய மருத்துவ அதிகாரி சிலி, சுகாதார ஆய்வாளர் மாதவன்பிள்ளை, பகுதி சுகாதார செவிலியர் ரத்தினஜோதி ஆகியோர் இந்த ஆய்வை மேற்கொண்டனர். அப்போது ஒவ்வொரு ஆஸ்பத்திரியிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா முன்எச்சரிக்கை நடவடிக்கை, தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தனர்.
குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே மாவட்டம் முழுவதிலும் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட தனியார் ஆஸ்பத்திரிகளில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் நகர்நல மையங்களின் டாக்டர்கள், நர்சுகள் ஆகியோர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் நாகர்கோவில் கோட்டார் பகுதிக்கு உட்பட்ட தனியார் ஆஸ்பத்திரிகளில் நேற்று ஆய்வு செய்யப்பட்டது. வடிவீஸ்வரம் நகர்நல மைய மருத்துவ அதிகாரி சிலி, சுகாதார ஆய்வாளர் மாதவன்பிள்ளை, பகுதி சுகாதார செவிலியர் ரத்தினஜோதி ஆகியோர் இந்த ஆய்வை மேற்கொண்டனர். அப்போது ஒவ்வொரு ஆஸ்பத்திரியிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா முன்எச்சரிக்கை நடவடிக்கை, தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தனர்.