செய்திகள்
சென்னை ஐகோர்ட்

சென்னையில் ஊரடங்கை கடுமையாக்கும் திட்டம் உள்ளதா?- அரசிடம் விளக்கம் கேட்கிறது ஐகோர்ட்

Published On 2020-06-11 09:00 GMT   |   Update On 2020-06-12 03:25 GMT
கொரோனா அதிகரித்து வருவதால் சென்னையில் ஊரடங்கை கடுமையாக்கும் திட்டம் உள்ளதா? என்பது பற்றி அரசு விளக்கம் அளிக்கும்படி ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
சென்னை:

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டிருந்த 5-ம் கட்ட ஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது. இது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட ஆணையின்படி உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி, கால் டாக்ஸி, ஆட்டோ ஆகியவற்றுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து படிப்படியாக மால்கள், பெரிய அளவிலான கடைகள், மத வழிபாட்டு தலங்கள் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டது.

இதையடுத்து கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் ஜூன் 15-ம் தேதி முதல் மீண்டும் நாடு முழுவதும் முழு ஊரடங்கை அமல்படுத்தப்படலாம் என்று தகவல் பரவி வருகிறது.

இந்நிலையில் இன்று வழக்கை விசாரிக்க தொடங்கிய நீதிபதிகள், கொரோனா அதிகரித்து வருவதால் சென்னையில் ஊரடங்கை கடுமையாக்கும் திட்டம் உள்ளதா? என கேள்வி எழுப்பினர். தற்போது பின்பற்றப்படும் நடைமுறையில் மாற்றணும் ஏதும் கொண்டு வரும் திட்டம் அரசிடம் உள்ளதா? இது தொடர்பாக தமிழக அரசு நாளை விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மக்கள் நலனை கருத்தில் கொண்டு கேள்வி எழுப்புவதாக நீதிபதிகள் வினீத் கோத்தரி, ஆர்.சுரேஷ்குமார் தெரிவித்தனர்.
Tags:    

Similar News