செய்திகள்
கைது

குற்றாலம் அருகே வீடு புகுந்து நகை திருடியவர் கைது

Published On 2020-06-10 08:06 GMT   |   Update On 2020-06-10 08:06 GMT
குற்றாலம் அருகே வீடு புகுந்து நகை திருடியவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 66 கிராம் தங்க நகைகள், ஏ.டி.எம் கார்டுகளை பறிமுதல் செய்தனர்.
தென்காசி:

குற்றாலம் அருகே உள்ள மத்தளம்பாறையை சேர்ந்தவர் முருகன் (வயது 45). அதே ஊரில் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது வீட்டில் தங்க நகைகள் மற்றும் 9 ஏ.டி.எம் கார்டுகள் திருடு போய்விட்டன.

இதுகுறித்து குற்றாலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அதே ஊரை சேர்ந்த ஹரிராம் சேட் (35) என்பவர் திருடியது தெரியவந்தது. அவரை இன்ஸ்பெக்டர் சுரேஷ் கைது செய்து, 66 கிராம் தங்கநகைகள், ஏ.டி.எம் கார்டுகளை பறிமுதல் செய்தார்.
Tags:    

Similar News