செய்திகள்
பெருங்குடியில் மின்வாரிய பெண் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி
பெருங்குடியில் மின்வாரிய பெண் ஊழியருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவனியாபுரம்:
மதுரை பெருங்குடி சிவசக்தி நகரில் வசிக்கும் மின்வாரிய பெண் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மதுரை மாநகரில் உள்ள அவரது அலுவலகத்தில் ஊழியர்களை பரிசோதனை செய்தபோது இந்த பெண் ஊழியரும் பரிசோதனை மேற்கொண்டார்.
முடிவில் பெண் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து சுகாதாரத்துறை ஊழியர்கள் அவரை ஆம்புலன்சு மூலம் மதுரை அரசு ஆஸ்பத்திரி கொரோனா தொற்று பிரிவிற்கு அனுப்பி வைத்தனர்.