செய்திகள்
மருத்துவர் தம்பிதுரையின் அர்ப்பணிப்புக்கு தலைவணங்குகிறேன்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டுவீட்
ஒருநாள்கூட விடுப்பு எடுக்காமல் குழந்தைகளுக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளித்துவரும் எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை மருத்துவர் தம்பிதுரைக்கு முதலமைச்சர் பாராட்டு தெரிவித்துள்ளது.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘ஊரடங்கு தொடங்கியதிலிருந்து ஒருநாள் கூட விடுப்பு எடுக்காமல் குழந்தைகளுக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளித்து வரும் எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை மருத்துவர் தம்பிதுரை அவர்களின் அர்ப்பணிப்பிற்கு தலை வணங்குகிறேன். அதே சமயம் அவரது உடல்நலனையும் கவனித்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்’’ எனப் பதிவிட்டுள்ளார்.