செய்திகள்
ஆண்டிப்பட்டியில் இந்து மக்கள் கட்சி பிரமுகர் தற்கொலை
ஆண்டிப்பட்டியில் இந்து மக்கள் கட்சி பிரமுகர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண்டிப்பட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகில் உள்ள முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த முருகன் மகன் நேதாஜி (வயது24). இவர் இந்து மக்கள் கட்சியின் ஒன்றிய செயலாளர். மேலும் சிவில் என்ஜினீயரானா இவர் கன்னியாகுமரியில் பணிபுரிந்து வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். வீட்டில் இருந்தபடியே சில பணிகளை செய்து வந்தார். கடந்த 6 மாதத்திற்கு முன்பு தனது தங்க செயினை அண்ணன் வாங்கி விற்று விட்டதால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
நேற்று குடிபோதையில் வீட்டிற்கு வந்த நேதாஜி தனது தாயிடம் தங்க செயினை வாங்கி தருமாறு கேட்டுள்ளார். அதன்பிறகு தனது அறைக்கு சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து ஆண்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை கைப்பற்றி தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகில் உள்ள முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த முருகன் மகன் நேதாஜி (வயது24). இவர் இந்து மக்கள் கட்சியின் ஒன்றிய செயலாளர். மேலும் சிவில் என்ஜினீயரானா இவர் கன்னியாகுமரியில் பணிபுரிந்து வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். வீட்டில் இருந்தபடியே சில பணிகளை செய்து வந்தார். கடந்த 6 மாதத்திற்கு முன்பு தனது தங்க செயினை அண்ணன் வாங்கி விற்று விட்டதால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
நேற்று குடிபோதையில் வீட்டிற்கு வந்த நேதாஜி தனது தாயிடம் தங்க செயினை வாங்கி தருமாறு கேட்டுள்ளார். அதன்பிறகு தனது அறைக்கு சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து ஆண்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை கைப்பற்றி தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.