செய்திகள்
அன்பரசன்

குடவாசலில் போலீஸ்காரர் விஷம் குடித்து தற்கொலை

Published On 2020-06-03 09:55 GMT   |   Update On 2020-06-03 09:55 GMT
குடவாசல் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக போலீஸ்காரர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
குடவாசல்:

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள சித்தாடி வடக்கு தெருவை சேர்ந்தவர் அன்பரசன்(வயது 40). இவர், திருவாரூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். இவருக்கும், அவரது தாயார் மாரியம்மாளுக்கும் வீடு கட்ட இடம் கேட்டதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் மணம் உடைந்த அன்பரசன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து கடந்த 31-ந் தேதி விஷம் குடித்தார்.

இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் அன்பரசன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து குடவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 
Tags:    

Similar News