செய்திகள்
ரவுடி கொலை

பிரபல ரவுடி கொலை?- போலீசார் விசாரணை

Published On 2020-06-02 10:09 GMT   |   Update On 2020-06-02 10:09 GMT
பெரம்பலூர் அருகே பிரபல ரவுடி கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்:

பெரம்பலூர் துறைமங்கலம் கே.கே.நகரை சேர்ந்தவர் நாராயணன். இவரது மகன் கபிலன் (வயது 25). பிரபல ரவுடியான இவர் மீது போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு துறைமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் அருகே கபிலன் கழுத்தறுத்த நிலையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கபிலன் உயிரிழந்தார்.

இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கபிலன் கழுத்தறுத்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் அவரை கொலை செய்தனரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News