செய்திகள்
மரணம்

ரெயில் மோதி வாலிபர் பலி

Published On 2020-05-29 13:56 GMT   |   Update On 2020-05-29 13:56 GMT
ரெயில் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சின்னசேலம்:

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 35). இவர் சின்னசேலம் ரெயில்வே கேட் அருகே மேம்பாலத்தின் கீழே உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக ரெயில்வே தண்டவாள பராமரிப்பு பணிக்காக சேலத்தில் இருந்து விருத்தாசலத்திற்கு ஊழியர்களை ஏற்றிக்கொண்டு சென்ற சிறப்பு ரெயில் முருகன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து சேலம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News