செய்திகள்
கைது

லாரி டிரைவரிடம் பணம் கேட்டு மிரட்டிய வாலிபர் கைது

Published On 2020-05-29 11:41 GMT   |   Update On 2020-05-29 11:41 GMT
தூத்துக்குடி அருகே லாரி டிரைவரிடம் பணம் கேட்டு மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி:

தூத்துக்குடி 3 செண்ட் அந்தோணியார்புரத்தைச் சேர்ந்தவர் ரவி. இவருடைய மகன் சரவணன்(வயது 25). லாரி டிரைவர். இவர் தூத்துக்குடி- திருச்செந்தூர் ரோட்டில் உள்ள திருமண மண்டபம் அருகே நடந்து சென்று கொண்டு இருந்தாராம். அப்போது அங்கு வந்த லெவிஞ்சிபுரம் 1-வது தெருவைச் சேர்ந்த மணிகண்டன்(19), சரவணனை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டினாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.
Tags:    

Similar News