செய்திகள்
காட்டு தீ

கடையம் அருகே முள்ளிமலையில் காட்டுத்தீ

Published On 2020-05-29 11:16 GMT   |   Update On 2020-05-29 11:16 GMT
கடையம் அருகே முள்ளிமலையில் காட்டுத்தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடையம்:

கடையம் அருகே உள்ள மீனாட்சிபுரத்தில் முள்ளிமலை பொத்தையில் நேற்று மதியம் திடீரென தீப்பிடித்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும், கடையம் வனச்சரகர் நெல்லை நாயகம் தலைமையில் பயிற்சி வனச்சரக அலுவலர்கள் தினேஷ்குமார், அஜய், சம்பத், ரவிபெருமாள், வனவர் முருகசாமி, வனக்காவலர்கள் ரமேஷ்பாபு, ஜெயா மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்துக்கு சென்றனர். அவர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீவிபத்தில் அரிய வகை மூலிகை செடிகள் எரிந்து நாசமானது. தீவிபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News