செய்திகள்
வீடு புகுந்து கொள்ளை

சேலத்தில் வீடு புகுந்து பணம், செல்போன் திருட்டு

Published On 2020-05-29 10:33 GMT   |   Update On 2020-05-29 10:33 GMT
சேலத்தில் வீடு புகுந்து பணம், செல்போன் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:

சேலம் தாதகாப்பட்டி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் மகுன்குமார் சிங்(வயது 31). இவர் நேற்று முன்தினம் காற்று வருவதற்காக வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கினார். பின்னர் காலையில் எழுந்து பார்க்கும் போது வீட்டில் பீரோவில் இருந்த ரூ.80 ஆயிரம் மற்றும் ரூ.6 ஆயிரம் மதிப்பிலான செல்போன் ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது.

இதுகுறித்து அவர் அன்னதானப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டுக்குள் புகுந்து பணம், செல்போனை திருடிய மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News