செய்திகள்
சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி (பழைய படம்)

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 817 பேருக்கு கொரோனா

Published On 2020-05-27 12:49 GMT   |   Update On 2020-05-27 13:43 GMT
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 817 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்று 817 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 18,545 ஆக உயர்ந்துள்ளது.

இன்று 6 பேர் உயிரிழந்ததால் மொத்த எண்ணிக்கை 133 ஆக உயர்ந்துள்ளது. 

இன்று 11,231 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. மொத்தமாக 4,23,018 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இன்று 567 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த எண்ணிக்கை 9 ஆயிரத்து 909 ஆக உயர்ந்துள்ளது.

இந்த தகவலை தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News