செய்திகள்
கைது

திருவள்ளூர் அருகே குட்கா விற்றவர் கைது

Published On 2020-05-27 11:20 GMT   |   Update On 2020-05-27 11:20 GMT
திருவள்ளூர் அருகே குட்கா விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த செவ்வாய்ப்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் உள்ளிட்ட போலீசார் நேற்று முன்தினம் வேப்பம்பட்டு பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அங்குள்ள பெட்டிக்கடை ஒன்றில் சோதனை செய்தபோது, அங்கு அரசால் தடை செய்யப்பட்ட 30 குட்கா பாக்கெட்டுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து, தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, அதை விற்றதாக பெருமாள்பட்டு பகுதியை சேர்ந்த ரமேஷ் (வயது 49) என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News