செய்திகள்
கோப்பு படம்

கோழிக்கறி சாப்பிட மறுத்த வாலிபர் மீது தாக்குதல்

Published On 2020-05-26 11:47 GMT   |   Update On 2020-05-26 11:47 GMT
கோவை அருகே கோழிக்கறி சாப்பிட மறுத்த வாலிபர் மீது தாக்குதல் நடத்தியவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை:

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் உமார்சந்த் மகாட்டோ (வயது 19). இவர் கோவை மாவட்டம் கோமங்கலத்தில் உள்ள கயிறு தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இவருடன் மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்த ராஜ்குமார் யாதவ் (27) என்பவர் வேலை பார்த்து வருகிறார்.

சம்பவத்தன்று அறையில் இருந்த ராஜ்குமார் யாதவ் கோழிக்கறி சமைத்தார். பின்னர் உமார்சந்த் மகாட்டோவை சாப்பிடுமாறு கூறினார். ஆனால் அவர் சாப்பிட மறுத்து விட்டார். இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ராஜ்குமார் யாதவ் அங்கு கிடந்த பிளாஸ்டிக் பைப்பால் உமார்சந்த் மகாட்டோவை தாக்கினார்.

இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது குறித்து கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமார் யாதவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News