செய்திகள்
அரிசி

போளூர் அருகே சிற்ப கலைஞர் குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள்

Published On 2020-05-24 10:47 GMT   |   Update On 2020-05-24 10:47 GMT
போளூர் அருகே சிற்ப கலைஞர் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட மளிகை பொருட்களை தாசில்தார் வழங்கினார்.
போளூர்:

போளூர் அருகே உள்ள மொடையூர் கிராமத்தை சேர்ந்த சிற்ப கலைஞர்கள் கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரமின்றி அவதிப்பட்டு வந்தனர். இதனையடுத்து அவர்கள் தங்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்து இருந்தனர்.

கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி உத்தரவின்பேரில் நேற்று போளூர் தாசில்தார் ஜெயவேல் நேரில் சென்று 220 சிற்ப கலைஞர் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்கினார்.

அப்போது துணை தாசில்தார் (தேர்தல்) மஞ்சுளா, வருவாய் ஆய்வாளர் சித்ரா, கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன் ஆகியோர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News