செய்திகள்
கைது

ஊத்துக்குளி அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது

Published On 2020-05-23 14:28 GMT   |   Update On 2020-05-23 14:28 GMT
ஊத்துக்குளி அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்தனர்.
ஊத்துக்குளி:

ஊத்துக்குளி அருகே செங்கப்பள்ளியில் உள்ள ஒரு வங்கி எதிரில் மறைவான இடத்தில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக ஊத்துக்குளி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து அப்பகுதிக்கு சென்ற ஊத்துக்குளி போலீசார் பணம் வைத்து சூதாடிய மோகன்ராஜ் (வயது 26), வெங்கடசாமி (43), குமார் (51), செல்வம் (51), துரை என்ற சிவராஜன் (50), செல்வம் (48) ஆகிய 6 பேரை கைது செய்த ஊத்துக்குளி இன்ஸ்பெக்டர் தவமணி அவர்களிடமிருந்து ரூ.42 ஆயிரத்து 300-ஐ கைப்பற்றினர். 
Tags:    

Similar News