செய்திகள்
விஷம்

ஆறுகாணியில் வாலிபர் வி‌ஷம் குடித்து தற்கொலை

Published On 2020-05-23 09:04 GMT   |   Update On 2020-05-23 09:04 GMT
ஆறுகாணி அருகே குடும்ப பிரச்சனை காரணமாக வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகர்கோவில்:

ஆறுகாணி அருகே சாறுவிளை வீடு பகுதியைச் சேர்ந்தவர் விஷால் (வயது 33). இவரது மனைவி மஞ்சு (29). கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் ஏற்பட்ட மன வருத்தத்தில் விஷால் வி‌ஷம் குடித்தார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி விஷால் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து அவரது மனைவி மஞ்சு கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News