செய்திகள்
பெண் தற்கொலை

திருவாரூர் அருகே பெண் தற்கொலை

Published On 2020-05-22 12:59 GMT   |   Update On 2020-05-22 12:59 GMT
திருவாரூர் அருகே எலி மருந்தை தின்று பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோட்டூர்:

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் தாதன் திருவாசல் தெற்கு தெருவை சேர்ந்தவர் சிவராமன். இவர் வெளி நாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ஜோதிமீனா (வயது23). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகின்றன. குழந்தைகள் இல்லை. இந்த நிலையில் ஜோதிமீனா வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். சம்பவத்தன்று வயிற்று வலி அதிகமானதால் மனவேதனை அடைந்த அவர் எலி மருந்தை (விஷம்) தின்றார்.

இதனால் மயக்கம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி ஜோதிமீனா பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து கோட்டூர் போலீஸ் நிலையத்தில் அவருடைய தாயார் பார்வதி (48) கொடுத்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்ட்டர் அறிவழகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். அவருக்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் தஞ்சை உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News