செய்திகள்
கைது

போடி அருகே நடத்தை சந்தேகத்தால் மனைவியை கொல்ல முயன்ற கணவர் கைது

Published On 2020-05-22 10:59 GMT   |   Update On 2020-05-22 10:59 GMT
போடி அருகே மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தில் அவரை கொல்ல முயன்ற கணவர் கைது செய்யப்பட்டார்.
மேலசொக்கநாதபுரம்:

தேனி மாவட்டம் போடி முத்தையா காலனியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது44). பெயிண்டர். இவரது மனைவி சாந்தி (35). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

கடந்த சில நாட்களாக மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் லட்சுமணன் அவருடன் தகராறில் ஈடுபட்டார். நேற்றும் இதேபோல் தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் சாந்தியின் கழுத்தை சேலையால் நெறுக்கினார். இதில் அவர் மயங்கி கீழே விழுந்தார்.

சாந்தி இறந்து விட்டதாக நினைத்து போடி டவுன் போலீஸ் நிலையத்தில் லட்சுமணன் சரண் அடைந்து போலீசாரிடம் விவரங்களை கூறினார். அவரை கைது செய்த போலீசார் வீட்டிற்கு விரைந்து சென்று பார்த்ததில் சாந்தி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

உடனே போலீசார் அவரை மீட்டு தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சாந்திக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News