செய்திகள்
கிருஷ்ணகிரி அருகே தொழிலாளியை தாக்கியவர் கைது
கிருஷ்ணகிரி அருகே தொழிலாளியை தாக்கியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அருகே உள்ள செம்படமுத்தூரை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 35). தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (34). சம்பவத்தன்று கோவிந்தராஜ், முனியப்பனின் இருசக்கர வாகனத்தை கேட்டதாக கூறப்படுகிறது. தர மறுத்ததால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இதில் முனியப்பனை கோவிந்தராஜ் தாக்கினார்.
இது தொடர்பான புகாரின் பேரில் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிந்தராஜை கைது செய்தனர்.