செய்திகள்
கிழக்கு மாவட்ட திமுக சார்பில் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு மளிகை பொருட்கள்
நாமக்கல்லில் கொரோனா சிகிச்சை பிரிவுக்கான 108 ஆம்புலன்சுகளில் பணிபுரியும் டிரைவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்களுக்கு மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நாமக்கல்:
நாமக்கல்லில் கொரோனா சிகிச்சை பிரிவுக்கான 108 ஆம்புலன்சுகளில் பணிபுரியும் டிரைவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்களுக்கு மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் டிரைவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் ஆகியவற்றை உள்ளடக்கிய மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பை மாவட்ட பொறுப்பாளர் ராஜேஸ் குமார் வழங்கினார். இதில் நாமக்கல் நகர பொறுப்பாளர் ராணா ஆனந்த், தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் நித்தியமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாமக்கல் மாவட்ட உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட தலைவர் இளம்பரிதி செய்திருந்தார்.