செய்திகள்
சேலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 18 ஆட்டோக்கள் பறிமுதல்
சேலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி இயக்கப்பட்ட 18 ஆட்டோக்களை பறிமுதல் செய்யப்பட்டது.
சேலம்:
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு வருகிற 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி ஆட்டோக்கள் இயக்க அனுமதிக்கப்படவில்லை. ஆனால் சிலர் எந்த ஒரு அனுமதியும் பெறாமல் ஆட்டோக்களை ஓட்டி சென்று வருகின்றனர். சேலம் மாநகரிலும் நேற்று ஆட்டோக்கள் சில ஓடின.
இந்த நிலையில் நேற்று சேலம் மாநகரில் போக்குவரத்து போலீசார் முக்கிய இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஊரடங்கு உத்தரவை மீறி இயக்கப்பட்ட 18 ஆட்டோக்களை பறிமுதல் செய்தனர். ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.