செய்திகள்
தற்கொலை

எருமப்பட்டி அருகே விஷம் குடித்து வக்கீல் தற்கொலை

Published On 2020-05-19 12:11 GMT   |   Update On 2020-05-19 12:11 GMT
எருமப்பட்டி அருகே வக்கீல் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
எருமப்பட்டி:

எருமப்பட்டி அருகே உள்ள தோட்டமுடையான்பட்டியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 42), வக்கீல். இவருடைய மனைவி சுதா(35). இவர்களுக்கு 7 வயதில் மகள் உள்ளாள்.

இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் இருவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து பெற்று விட்டனர். மேலும் சுதா தனது மகளுடன் உள்ளார்.

மனைவி, மகளை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த கோபாலகிருஷ்ணன் மனம் உடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று அவர் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை உடனடியாக கார் மூலம் அருகில் உள்ள நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபாலகிருஷ்ணனின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News