செய்திகள்
வல்லத்தில் மின்னலுடன் பலத்த மழை- பொதுமக்கள் மகிழ்ச்சி
வல்லத்தில் மின்னலுடன் பெய்த பலத்த மழை காரணமாக வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கள்ளப்பெரம்பூர்:
தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இதனால் மக்கள் கடும் அவதிபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று தஞ்சையை அடுத்த வல்லத்தில் இதமான காற்று வீசியது. அதைத்தொடர்ந்து இரவு 8.30 மணி அளவில் வல்லத்தில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. சாலைகளிலும் மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
வல்லத்தில் பாதாள சாக்கடை திட்ட பணிக்காக தோண்டப்பட்டிருந்த பள்ளங்களில் மழைநீர் நிரம்பி வழிந்தது. பலத்த மழையை அடுத்து வல்லம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கத்தால் சிரமம் அடைந்த மக்கள் நேற்று இரவு பெய்த மழையால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியதால் மகிழ்ச்சி அடைந்தனர்.
தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இதனால் மக்கள் கடும் அவதிபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று தஞ்சையை அடுத்த வல்லத்தில் இதமான காற்று வீசியது. அதைத்தொடர்ந்து இரவு 8.30 மணி அளவில் வல்லத்தில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. சாலைகளிலும் மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
வல்லத்தில் பாதாள சாக்கடை திட்ட பணிக்காக தோண்டப்பட்டிருந்த பள்ளங்களில் மழைநீர் நிரம்பி வழிந்தது. பலத்த மழையை அடுத்து வல்லம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கத்தால் சிரமம் அடைந்த மக்கள் நேற்று இரவு பெய்த மழையால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியதால் மகிழ்ச்சி அடைந்தனர்.