செய்திகள்
கோப்பு படம்

ரூ. 75 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்கள் பறிமுதல்

Published On 2020-05-17 09:09 GMT   |   Update On 2020-05-17 09:09 GMT
பெரம்பலூரில் கள்ளத்தமான மது விற்பனை செய்தவரை கைது செய்த போலீசார் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஏடிஎஸ்பி ராஜாராம் தலைமையில், இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி மற்றும் எஸ்.ஐ.க்கள்கொண்ட தனிப்படையினர் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுப்பட்டனர்.

அப்போது பெரம்பலூர் புதுபஸ்ஸ்டாண்ட் எதிர்புறம் ஒரு டாஸ்மாக் கடை அருகில் உள்ள பாரில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்த குரும்பலூரை சேர்ந்த பெரியசாமி மகன் சந்திரசேகர் (55) என்பவரை கைது செய்த போலீசார் அங்கு கள்ளத்தனமாக விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூ. 75 ஆயிரம் மதிப்புள்ள 458 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News