செய்திகள்
கைது

கிருஷ்ணகிரி அருகே பணம் வைத்து சூதாடிய 15 பேர் கைது

Published On 2020-05-12 13:41 GMT   |   Update On 2020-05-12 13:41 GMT
கிருஷ்ணகிரி அருகே பணம் வைத்து சூதாடிய 15 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
தேன்கனிக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் போலீசார் பிலிகுண்டுலு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த லாரன்ஸ்(வயது40), ஜோசப் (45), அந்தோணிராஜ் (45), அகஸ்டியன் (40), மதலையன்ராஜ் (55), பால்ராஜ் (50), ஜெயராஜ் (58) ஆகிய 7 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இதே போல், மத்திகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ் மற்றும் போலீசார் கர்னூர் ஏரிக்கரை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த பேளகொண்டப்பள்ளி மஞ்சுநாத் (31), முனிரெட்டி (60), சரவணகுமார் (30), முனிகிருஷ்ணா (35), சென்னீரா (33), மஞ்சுநாத் (30), நாராயணா (48), குமார் (32) ஆகிய 8 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News