செய்திகள்
நாசரேத் அருகே மாமனார்-மருமகன் வெட்டிக்கொலை
நாசரேத் அருகே மாமனார் மருமகன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து 6 கொண்ட கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள உடையார் குளம் காந்திநகரை சேர்ந்தவர் பலவேசம்(வயது 60), கூலித்தொழிலாளியான இவர் நேற்று இரவு தனது வீட்டில் மகள் மற்றும் மருமகன் தங்கராஜ் (27) ஆகியோரிடம் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அவரது வீட்டிற்குள் புகுந்த 6 பேர் கொண்ட கும்பல் பலவேசத்தை வெட்டினர். தடுக்க முயன்ற தங்கராஜையும் அந்த கும்பல் வெட்டியது. இதில் அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே துடி துடித்து இறந்தனர்.
கொடுக்கல்- வாங்கல் பிரச்சினையில் பலவேசம் மற்றும் அவரது மருமகனை சண்முகசுந்தரம் என்பவரின் உறவினர்கள் வெட்டிக்கொலை செய்தது தெரிய வந்தது. அவர்களில் முத்துராஜ், செல்லத்துரை, பாரதி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.