செய்திகள்
திருவண்ணாமலை மாவட்டம்

கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பை சந்தித்த திருவண்ணாமலை

Published On 2020-05-06 04:46 GMT   |   Update On 2020-05-06 04:46 GMT
திருவண்ணாமலையில் முதல் முறையாக கொரோனாவுக்கு வைரஸ் பாதிப்புக்கு உள்ளான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
திருவண்ணாமலை:

தமிழகத்தில் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்துள்ளது. குறிப்பாக சென்னையில் மட்டும் 2 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 25-ஆக உள்ளது. 10 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 15 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் திருவண்ணாமலையில் முதல் முறையாக கொரோனாவுக்கு வைரஸ் பாதிப்புக்கு உள்ளான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஆரணியே சேர்ந்த 55 வயது பெண் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 
Tags:    

Similar News