செய்திகள்
கைது

திருப்பூர் மாநகரில் முழுஊரடங்கை மீறிய 83 பேர் கைது

Published On 2020-04-28 13:07 GMT   |   Update On 2020-04-28 13:07 GMT
திருப்பூர் மாநகரில் முழுஊரடங்கை மீறிய 83 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்:

திருப்பூர் மாநகர பகுதியில் முழு ஊரடங்கு நேற்று 2-வது நாளாக அமல்படுத்தப்பட்டது. தேவையில்லாமல் சாலைகளில் வாகனங்களில் சுற்றித்திரிபவர்களை போலீசார் கைது செய்து வாகனங்களை பறிமுதல் செய்தனர். அதன்படி மாநகரில் நேற்று 83 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 83 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 62 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News