செய்திகள்
பலியான சிறுவர்கள்

குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி

Published On 2020-04-28 10:31 GMT   |   Update On 2020-04-28 10:31 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அருகே குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள ரங்கப்பனூர் புதுக்காலனியை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி வேடிப்பிள்ளை. இவர்களுக்கு 2 வயதில் தில்ஷன் என்ற மகன் இருந்தான். நேற்று காலை தில்ஷன், அதே பகுதியை சேர்ந்த மஞ்சுநாதன் மகன் ரித்தினுடன்(6), அப்பகுதியில் உள்ள குட்டையின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது சிறுவர்கள் 2 பேரும் குட்டைக்குள் தவறி விழுந்து, தண்ணீரில் மூழ்கினர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று குட்டைக்குள் இறங்கி, தண்ணீரில் மூழ்கிய 2 சிறுவர்களையும் மீட்டு புதுப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

அங்கு 2 பேரையும் பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே தில்ஷனும், ரித்தினும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News