செய்திகள்
தீவிபத்து

சென்னை பாரிமுனை எல்.ஐ.சி. கட்டிடத்தில் தீ விபத்து

Published On 2020-04-28 07:42 GMT   |   Update On 2020-04-28 07:42 GMT
சென்னை பாரிமுனை சந்திப்பில் அடுக்கு மாடிகளை கொண்ட எல்.ஐ.சி. கட்டிடத்தில் இன்று மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சென்னை:

சென்னை பாரிமுனை சந்திப்பில் அடுக்கு மாடிகளை கொண்ட எல்.ஐ.சி. கட்டிடம் செயல்பட்டு வருகிறது. இதில் இன்று காலை 5.30 மணி அளவில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

உடனடியாக 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் 7 வாகனங்களில் விரைந்து சென்றனர். எல்.ஐ.சி. கட்டிடத்தில் 4-வது மாடியில் தீ மளமளவென பரவியது. சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

5-வது மாடியில் எல்.ஐ.சி. நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அங்கு தீ பரவியதில் பல ஆவணங்களும் எரிந்து சாம்பலாகி இருப்பதாக கூறப்படுகிறது. தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததால் அருகில் உள்ள கடைகள் மற்றும் குடியிருப்புகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.
Tags:    

Similar News