செய்திகள்
கைது

கோவையில் அதிகரிக்கும் விதி மீறல் - ஒரே நாளில் 1,183 பேர் கைது

Published On 2020-04-23 08:35 GMT   |   Update On 2020-04-23 08:35 GMT
கோவை மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக நேற்று ஒரே நாளில் 1,089 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1,183 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை:

கொரோனா குறித்து பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தி வந்தாலும் கட்டுப்பாட்டை மதிக்காமல் கோவை மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக நாளுக்கு நாள் கைதாகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 1,089 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1,183 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்ளிடமிருந்து 1,064 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 

கோவை புறநகரில் மட்டும் ரூ.1,88500அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து இந்தநிலை நீடித்து வருவதால் போலீசார் ஓய்வின்றி தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.


Tags:    

Similar News