செய்திகள்
திருவையாறு அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து- வாலிபர் பலி
திருவையாறு அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவையாறு:
திருவையாறு அருகே பள்ளியக்கிரஹாரம் பெரியதெருவைச் சேர்ந்தவர் ஜோசப் மகன் ரீகன் (31). அவர் சம்பவத்தன்று 2-ந்தேதி இரவு மேலத்திருப்பூந்துருத்தி அற்புத மாதா கோயில் தெருவிலுள்ள அவரது நண்பர் மரியதாஸ் மகன் அய்யப்பன்(42) வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு மீண்டும் இரவு பள்ளியக்கிரஹாரத்திற்கு திரும்பியுள்ளனர்.
கீழத்திருப்பூந்துருத்தி அருகில் அவர்கள் வந்தபோது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த ஒரு லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வாகனத்தை ஓட்டி வந்த ரீகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த அய்யப்பனை 108 ஆம்புலன்சு மூலம் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.
தகவலறிந்த நடுக்காவேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரீகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி நடுக்காவேரி போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவையாறு அருகே பள்ளியக்கிரஹாரம் பெரியதெருவைச் சேர்ந்தவர் ஜோசப் மகன் ரீகன் (31). அவர் சம்பவத்தன்று 2-ந்தேதி இரவு மேலத்திருப்பூந்துருத்தி அற்புத மாதா கோயில் தெருவிலுள்ள அவரது நண்பர் மரியதாஸ் மகன் அய்யப்பன்(42) வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு மீண்டும் இரவு பள்ளியக்கிரஹாரத்திற்கு திரும்பியுள்ளனர்.
கீழத்திருப்பூந்துருத்தி அருகில் அவர்கள் வந்தபோது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த ஒரு லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வாகனத்தை ஓட்டி வந்த ரீகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த அய்யப்பனை 108 ஆம்புலன்சு மூலம் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.
தகவலறிந்த நடுக்காவேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரீகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி நடுக்காவேரி போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.