செய்திகள்
கைது

வல்லத்தில் 144 தடை உத்தரவை மீறிய 20 பேர் கைது

Published On 2020-04-02 07:34 GMT   |   Update On 2020-04-02 07:34 GMT
தஞ்சை மாவட்டம் வல்லத்தில் 144 தடை உத்தரவை மீறிய 20 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 20 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டனர்.
வல்லம்:

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு ஊரடங்கு உத்தரவையும், தமிழக அரசு 144 தடை உத்தரவையும் பிறப்பித்துள்ளது.

கடந்த 8 நாட்களாக இந்த தடை உத்தரவுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று வல்லம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் வல்லம் பேருந்து நிலையம் அருகே கண்காணிப்பு பணி மேற்கொண்டனர்.

அத்தியாவசிய தேவை இன்றி தடையை மீறி வெளியில் மோட்டார் சைக்கிளில் சுற்றி திரிந்த 20 பேரை போலீசார் பிடித்தனர். இதுகுறித்து வல்லம் போலீசார் 144 தடை உத்தரவை மீறி செயல்பட்டதாக 20 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும் 20 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News