தஞ்சை அருகே கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை
வல்லம்:
தஞ்சை அருகே உள்ள மருங்குளம் நால்ரோடு பகுதியை சேர்ந்தவர் விவசாயி ராமையன். இவருடைய மகள் நித்யா(வயது 22). இவர் தஞ்சையில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் நித்யா அவருடைய வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு வீட்டில் இருந்த நித்யாவை அவருடைய பெற்றோர் அவர் வீட்டு வேலைகளை செய்யவில்லை என கண்டித்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் இருந்த எலி பேஸ்டை யாருக்கும் தெரியாமல் தின்று உள்ளார். இதனையடுத்து உடனடியாக அவரது பெற்றோர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைகாகாக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து நித்யாவின் தந்தை ராமையன்(48) கொடுத்த புகாரின் பேரில் வல்லம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.