செய்திகள்
தஞ்சை அருகே கல்லூரியில் 6 பேட்டரிகள் திருட்டு
தஞ்சை அருகே கல்லூரியில் 6 பேட்டரிகளை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வல்லம்:
தஞ்சையை அடுத்த வல்லத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவர்களை அழைத்து வர பல பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. பேருந்துகளை பராமரிக்க கல்லூரி வளாகத்தில் பராமரிப்பு மையம் உள்ளது.
இந்நிலையில் நேற்று பராமரிப்பு மையத்தில் வைக்கப்பட்டிருந்த 6 பேட்டரிகளை மர்ம ஆசாமிகள் திருடி சென்று உள்ளனர். இது குறித்து கல்லூரியில் பணிபுரியும் கணேசன்(34) என்பவர் கொடுத்த புகாரின் பேரில் வல்லம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.